ஆட்டோமொபைல்
பண்டிகை காலம் அமோகம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் சமீபத்திய பண்டிகை காலம் அமோகம் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் சமீபத்திய பண்டிகை கால விற்பனையில் 12 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் புதிய பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பண்டிகை காலம், தட்டுப்பாடு மற்றும் அசத்தலான சலுகைகள் உள்ளிட்டவை விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது என டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. விற்பனை மட்டுமின்றி முன்பதிவிலும் 10 முதல் 13 சதவீதம் வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக டொயோட்டா தெரிவித்து உள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாத விற்பனை பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபெற்று இருக்கிறது. பண்டிகை காலம் நிறைவுற்றதும் வாகனங்கள் விற்பனை குறைய வாய்ப்புகள் இருப்பதாக அந்நிறுவனம் கணித்திருக்கிறது.