செய்திகள்
கோப்புபடம்.

குடிமங்கலம் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய 18 பேர் கைது

Published On 2021-09-23 09:15 GMT   |   Update On 2021-09-23 09:15 GMT
போலீசார் இன்று அதிகாலை குடிமங்கலம் காட்டுப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தது.
குடிமங்கலம்:

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சிலர்  சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  குடிமங்கலம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை குடிமங்கலம் காட்டுப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தது. 

போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களில்  18பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார், சூர்யபிரகாஷ், கணேஷ், மணிகண்டன், மாரிமுத்து உள்பட 18 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடுவதை தொழிலாக கொண்டுள்ளனர். பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சீட்டு விளையாடி வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  
Tags:    

Similar News