உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
போலீசார் தீவிர விசாரணை நடத்தி மணிகண்டன் மற்றும் சிறுமியை கண்டுபிடித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி செல்போன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஏற்பட்ட தொடர்பால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பழனி மகன் மணிகண்டன் (21) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி காதலிப்பதாக சிறுமியை நம்ப வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 24-ந்தேதி வீட்டிலிருந்த சிறுமி மாயமானார்.
தங்களது மகளை காணவில்லை என்று காமநாயக்கன்பாளையம் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர் .வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி மணிகண்டன் மற்றும் சிறுமியை கண்டுபிடித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையி மணிகண்டன் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் மணிகண்டனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.