தோஷ பரிகாரங்கள்
பாவங்களை போக்கும் ஐந்து விதமான சேவைகள்

பாவங்களை போக்கும் ஐந்து விதமான சேவைகள்

Published On 2022-02-23 05:42 GMT   |   Update On 2022-02-23 05:42 GMT
எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:
மனித உடல் இறைவனால் பஞ்ச பூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாகும். பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தான் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களான மெய், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு விளைவிக்கும்போது ஏற்படும் பாவங்களால் கர்மவினைகள் உண்டாகிறது.

எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:

1. யாதனம் : கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
2. சிரவணம் :- இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
3. கீர்த்தனம் :- இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
4. பூஜார்த்தனம் :- அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத் தியம் படைத்து பூஜை செய்தல்.
5. ஸ்துதி - : இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

இந்த ஐந்து விதமான சேவைகளை செய்து வர கர்ம வினைகளால் உடல், உயிர் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் கிடைக்கும். இந்த வழிபாட்டை ஜென்ம நட்சத்திர நாளில் செய்யும் போது பலன் இரட்டிப்பாகும்.

குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
Tags:    

Similar News