செய்திகள்
மின் தடை

துங்கபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-08-18 18:09 GMT   |   Update On 2019-08-18 18:09 GMT
கூத்தூர் தொகுப்பு துணை மின்நிலையத்தில் இருந்து செல்கின்ற மின் பாதைகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் நிறுத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் மாவட்ட கூத்தூர் உதவி செயற்பொறியாளர் செல்லப்பாங்கி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூத்தூர் தொகுப்பு துணை மின்நிலையத்தில் இருந்து செல்கின்ற மின் பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே கூத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும், அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர், நமங்குணம், புதுவேட்டக்குடி, கோவில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம், குழுமூர் மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News