உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காயல்பட்டினத்தில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-01-19 10:11 GMT   |   Update On 2022-01-19 10:11 GMT
காயல்பட்டினம் பூந்தோட்டம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது காயல்பட்டினம் பூந்தோட்டம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), இவரது உறவினரான சேகர் (64) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. 

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News