செய்திகள்
கைது

உடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2021-01-27 11:59 GMT   |   Update On 2021-01-27 11:59 GMT
உடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த குமார்(வயது 47), பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன்(74), இடையாரை சேர்ந்த சங்கர்(42) ஆகிய 3 பேரும் சேர்ந்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News