செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சிறந்த பாராளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங் மறைவு வேதனை அளிக்கிறது -ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

Published On 2020-09-27 06:05 GMT   |   Update On 2020-09-27 06:08 GMT
மூத்த படைவீரரும் சிறந்த பாராளுமன்றவாதியுமான ஜஸ்வந்த் சிங் மறைவு தனக்கு வேதனை அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 82. வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மூத்த படைவீரர், சிறந்த பாராளுமன்றவாதி, விதிவிலக்கான தலைவர் மற்றும் அறிவுஜீவியான ஜஸ்வந்த் சிங் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவர் பல கடினமான பணிகளையும் எளிதாக மற்றும் சமநிலையுடன் கையாண்டார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News