செய்திகள்
தற்கொலை

துறையூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-02-10 12:36 GMT   |   Update On 2020-02-10 12:36 GMT
துறையூர் அருகே கல்லூரி மாணவர் விவசாய தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார் (வயது 20).  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து  வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் செந்தில்குமார் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த செந்தில் குமாரின் தந்தை சுந்தர்ராஜ் துறையூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், சப்- இன்ஸ் பெக்டர் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். செந்தில்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News