செய்திகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் நாட்களில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னையில் தி.நகர் ,சைதாப்பேட்டை, நந்தனம் அசோக்நகர், அடையாறு, தேனாம்பேட்டை , ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கோபாலபுரம், மந்தைவெளி மயிலாப்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், புதுவண்ணாரபேட்டை உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.