செய்திகள்
உத்தனப்பள்ளி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
உத்தனப்பள்ளி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 23). கூலித்தொழிலாளியான இவர் ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள துப்புகானப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சிவக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.