செய்திகள்
சோளிங்கர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சோளிங்கர் அருகே இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். அவரது மனைவி ஈஸ்வரி (வயது 30). இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொண்டபாளையம் போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.