ஆன்மிகம்
கள்ளழகர்

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சர்வ அமாவாசை பூஜை

Published On 2021-06-11 07:46 GMT   |   Update On 2021-06-11 07:46 GMT
கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பூஜைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
மதுரையை அடுத்த கள்ளழகர் கோவிலில் வைகாசி மாத சர்வ அமாவாசை பூஜை நடந்தது. இதையொட்டி அங்குள்ள மூலவர் கள்ளழகர் சுந்தர ராச பெருமாள், தேவியர்களுக்கும், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.

இதேபோல் சோலைமலை முருகன் கோவிலிலும் பூஜைகள் நடந்தன. இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர், வேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பூஜைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
Tags:    

Similar News