செய்திகள்
வைகோ

சப்-இன்ஸ்பெக்டர் கொலை: குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் - வைகோ

Published On 2021-11-22 05:06 GMT   |   Update On 2021-11-22 05:06 GMT
சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது.

நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இரவுக் காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களைப் பின் தொடர்ந்து, 15 கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது.


அவரது உடல், உரிய சிறப்புகளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. குற்றத் தொடர்பு உடைய 4 பேர்களைக் காவல் துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என்ற நிதியமைச்சர் அறிவிப்பு வேதனை அளிக்கிறது: ஓ.பி.எஸ்.

Tags:    

Similar News