செய்திகள்
போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த காட்சி.

தீபாவளி பண்டிகை - உடுமலையில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2021-10-27 09:43 GMT   |   Update On 2021-10-27 09:43 GMT
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை:

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பொது மக்கள் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிக்கு வந்து செல்கின்றனர். கிராமங்களில் இருந்து பஸ்சில் உடுமலை நகருக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் பஸ்கள் மற்றும் பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திருடர்கள் புகுந்து பொதுமக்கள் வைத்துள்ள பொருட்களை திருடிச் செல்வதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உடுமலையில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

அதன்படி உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

சிலர் உங்களிடம் பொருள்களைதிருடுவதற்காக கீழே பணம் கிடக்கிறது என்று கூறி உங்கள் கவனத்தை திசை திருப்பகூடும். அவ்வாறு யாராவது கூறினால் ஏமாறாமல் விழிப்புடன் இருங்கள். சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் போலீசுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா கண்ணா, (சட்டம் ஒழுங்கு ), குற்றப்பிரிவு சுஜாதா ,வெங்கடேசன் (போக்குவரத்து பிரிவு) ஆகியோர் பேசினர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்தையா, போலீசார், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ் பயணிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்களிடமும் கடைகள் நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். பொதுமக்கள் காவல்துறை அவசர உதவி அல்லது செயலியை பயன்படுத்தலாம்.

சந்தேக நபர்களை கண்டால் அதை போட்டோ எடுத்து காவல் நிலையம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் இவ்வாறு அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News