செய்திகள்
சரன்மகாதேவி அருகே தொழிலாளி தற்கொலை
சரன்மகாதேவி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேரன்மகாதேவி:
சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று கணேசன் விஷத்தை குடித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேரன்மகாதேவி போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.