செய்திகள்
தற்கொலை

தந்தை இறந்த சோகத்தில் விபரீத முடிவு- ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-30 02:54 GMT   |   Update On 2020-09-30 02:54 GMT
நொளம்பூரில் தந்தை இறந்த சோகத்தில் துக்கம் தாங்க முடியாமல் ஏ.சி.மெக்கானிக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திரு.வி.க.நகர்:

செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 25). இவர் ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது தந்தை சேட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவினால் இறந்து விட்டார். இந்த நிலையில், தனது அண்ணன் கார்த்திக் மற்றும் தாயுடன் வசித்து வந்த விமல்ராஜ், தந்தை இறந்த துக்கம் தாங்க முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நொளம்பூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது பூர்வீக வீட்டிற்கு வந்த விமல்ராஜ் அங்கு நீண்ட நேரம் தனியாக அமர்ந்து இருந்துள்ளார்.

அதன் பின்னர் மன வருத்தத்தில் இருந்த விமல்ராஜ் திடீரென அங்குள்ள அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவினர் ராஜேஸ்வரி நொளம்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையறிந்த போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த விமல்ராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News