செய்திகள்
உயிரிழப்பு

பாளை ஜெயில் கைதி உயிரிழப்பு

Published On 2021-06-07 10:34 GMT   |   Update On 2021-06-07 10:34 GMT
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை ஜெயலில் அடைக்கப்பட்டிருந்தார்.
நெல்லை:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காசிலிங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 75). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை ஜெயலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கைதிகளுக்குரிய அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலன் இல்லாமல் செல்லத்துரை இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News