ஆன்மிகம்
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் பிரகத் சுந்தரகுசாம்பிகை உடனாகிய மகாலிங்கசுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் பிரகத் சுந்தரகுசாம்பிகை உடனாகிய மகாலிங்கசுவாமி கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
சங்காபிஷேகத்தையொட்டி நடந்த சிறப்பு ஆராதனைகளில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சங்காபிஷேகத்தையொட்டி நடந்த சிறப்பு ஆராதனைகளில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.