செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது

Published On 2021-03-26 10:29 GMT   |   Update On 2021-03-26 10:29 GMT
புதுவையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபை தேர்தலையொட்டி ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இன்று முதல் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்குகிறது. புதுவையில் 30 தொகுதிகளிலும் 324 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுவையில் 23 தொகுதிகளில் ஆயிரத்து 217 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. புதுவை ரெட்டியார் பாளையம் ஜெயா நகர் பகுதியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு ஆயிரத்து 822 ஓட்டு எந்திரங்கள் ஆயிரத்து 724 வி.வி.பேட் எந்திரம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி சுதாகர் கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

இன்று முதல் 2 நாட்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News