செய்திகள்
தடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நான்கு நாட்களும் அதிகம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘நாட்டு மக்கள் 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள், கொரோனா சிகிச்சையில் உள்ள மக்களுக்கு உதவுங்கள், முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.
மேலும், யாராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்த பகுதியில் மைக்ரோ-கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்க வேண்டும்’ என பிரதமர் கூறி உள்ளார்.