செய்திகள்
தாக்குதல்

கம்பம் அருகே கடனை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கிய டிரைவர்

Published On 2019-11-15 10:15 GMT   |   Update On 2019-11-15 10:15 GMT
கம்பம் அருகே கடனை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி:

கம்பம் கக்கன்காலனியைச் சேர்ந்த பூங்கொடி (வயது 45). இவர் கணவரை விட்டு பிரிந்து பாண்டியன் என்பவருடன் கடந்த 12 வருடமாக வாழ்ந்து வருகிறார். பூங்கொடியின் மகள் நந்தினி என்பவர் பாண்டியனுக்கு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். இந்த கடனை திரும்ப கேட்டு பல முறை பிரச்சினை செய்துள்ளார்.

இதனால் சம்பவத்தன்று பூங்கொடி அந்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் பூங்கொடியை ஓட ஓட விரட்டி அவரை கோடாரியால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். மேலும் கடன் கேட்டால் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி சென்று விட்டார்.

படுகாயமடைந்த பூங்கொடி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News