செய்திகள்
குளித்தலை பகுதியில் மது விற்ற 4 பேர் கைது
குளித்தலை பகுதியில் மது விற்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:
குளித்தலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து குளித்தலை பெரியபாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்ற ரவி (வயது 51), குமரேசன் (35), ராஜ்குமார் (35), பழனிவேல் (42) ஆகிய 4 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து குளித்தலை பெரியபாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்ற ரவி (வயது 51), குமரேசன் (35), ராஜ்குமார் (35), பழனிவேல் (42) ஆகிய 4 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.