செய்திகள்
விபத்து பலி

குருபரப்பள்ளி அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2021-10-17 10:27 GMT   |   Update On 2021-10-17 10:27 GMT
குருபரப்பள்ளி அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள வி.மாமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 51). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலைக்காக குருபரப்பள்ளி பகுதிக்கு வந்திருந்தார். இவரும், குள்ள கருப்பன் (45) என்பவரும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே புலியரசி மேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குள்ள கருப்பன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் விரைந்து சென்று இறந்த மாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்தமிழ் செல்வராசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News