செய்திகள்
தவறுகளை யாரும் ஒத்துக்கொள்வது இல்லை- கே.எஸ்.அழகிரிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
யாரும் தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்வது இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். இந்த இயக்கம் நாளுக்கு நாள் வளரும். நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இது அ.தி.மு.க.வின் சூழ்ச்சி என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
யாரும் தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்வது இல்லை. அதன் வெளிப்பாடு தான் அவர் கூறியது. அரசியல் கட்சிகள் அதிகளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோர்ட்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அது அவருடைய கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். இந்த இயக்கம் நாளுக்கு நாள் வளரும். நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இது அ.தி.மு.க.வின் சூழ்ச்சி என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
யாரும் தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்வது இல்லை. அதன் வெளிப்பாடு தான் அவர் கூறியது. அரசியல் கட்சிகள் அதிகளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோர்ட்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அது அவருடைய கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.