உள்ளூர் செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

Published On 2022-01-07 07:31 GMT   |   Update On 2022-01-07 07:31 GMT
மார்க்கெட்டுக்கு வரும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.
போரூர்:

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை, பூ, பழம் விற்பனை நடைபெற்று வரும் சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறும்போது :- ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் சந்தை வழக்கம் போல செயல்படும். மார்க்கெட்டுக்கு வரும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News