செய்திகள்
ஏடிஎம் கொள்ளை வழக்கு- கைதான நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
ஏடிஎம் கொள்ளை வழக்கில் அரியானாவில் கைதான நஜீம் உசேன் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னை:
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 3-வது கொள்ளையன் நஜீம் உசேனை அரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் நஜீம் உசேன் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நஜீம் உசேனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நஜீம் உசேன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.