செய்திகள்
கோப்பு படம்.

நீலகிரியில் மேலும் 148 பேருக்கு கொரோனா

Published On 2021-05-09 17:38 GMT   |   Update On 2021-05-09 17:38 GMT
நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 781 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 934 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 781 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 934 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்து 51 பேர் இறந்தனர். மீதமுள்ள 796 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளியிடங்களுக்கு சென்று வருகிறவர்கள் வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News