வழிபாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

ஸ்ரீரங்கத்தில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி திருவிழாக்கள் ஏன்?

Published On 2021-12-13 07:50 GMT   |   Update On 2021-12-13 07:50 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை, ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன.
ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படும். சில வேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத் திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிகழும்.

Tags:    

Similar News