ஆன்மிகம்
நாளை ஆவணி மாத அமாவாசை: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு
நாளை ஆவணி அமாவாசை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக பூஜையை www.samayapurammariammantemple.org மற்றும் wwwtnhrce.gov.in மற்றும் Mariyamman Temple என்ற யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று ஆவணி அமாவாசை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.
அதன்படி அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் காக்க வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெறுகிறது. இதனை பக்தர்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் கோவில் இணையதளமான www.samayapurammariammantemple.org மற்றும் wwwtnhrce.gov.in மற்றும் Mariyamman Temple என்ற யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம். இந்த தகவலை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் காக்க வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெறுகிறது. இதனை பக்தர்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் கோவில் இணையதளமான www.samayapurammariammantemple.org மற்றும் wwwtnhrce.gov.in மற்றும் Mariyamman Temple என்ற யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம். இந்த தகவலை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.