செய்திகள்
கோப்புபடம்.

கூடுதல் போனஸ் வழங்க கோரி தொழிற்சங்கத்தினர் 21 - ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-18 09:38 GMT   |   Update On 2021-10-18 09:38 GMT
பின்னலாடைத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அனைத்து நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூரில் பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டமானது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ளது. 

எனவே திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் டைம் ரேட், பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். 

பின்னலாடைத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அனைத்து நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21 - ந்தேதி (வியாழக்கிழமை) திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   
Tags:    

Similar News