செய்திகள்
துரைமுருகன்

அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது- துரைமுருகன் பேட்டி

Published On 2021-04-02 05:52 GMT   |   Update On 2021-04-02 05:52 GMT
வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
சென்னை:

சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போல் அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது.

* மகள் செந்தாமரை வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள்.

* ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும்.

* தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர்.

* வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல.

* கண் துடைப்புக்காக அதிமுகவினரின் இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது. திமுகவை பயமுறுத்தவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News