முக்கிய விரதங்கள்
மாரியம்மன்

காட்டுமன்னார்கோவிலில் மக்களுக்காக மாரியம்மன் விரதம் இருக்கும் உற்சவம்

Published On 2022-04-02 04:05 GMT   |   Update On 2022-04-02 04:05 GMT
காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவிலில் கடந்த 13-ந்தேதி முதல் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், மக்கள் நோய்நொடி இன்றி வாழ்வதற்காக மாரியம்மன் பச்சைபட்டினி விரதம் இருக்கும் உற்சவம் நடைபெறும். அதன்படி, கடந்த 13-ந்தேதி முதல் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது.

இதில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்ற போதிலும், படையல் வைத்து வழிபடுவது என்பது கிடையாது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்றைய தினம், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News