செய்திகள்
கோப்புபடம்

அரசு வேலை கிடைக்காத விரக்தி - என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை

Published On 2020-10-20 07:02 GMT   |   Update On 2020-10-20 07:02 GMT
கோவை அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.
கணபதி:

கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வந்து31). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலைக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதி வந்தார். ஆனால் அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மனோஜ்குமார் சில நாட்களாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News