செய்திகள்
கைது

ஆரணி ஆற்றுப்படுகையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2021-06-13 12:58 GMT   |   Update On 2021-06-13 12:58 GMT
ஆரணி ஆற்றுப்படுகையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி வி.ஏ.கே.நகர் ஆற்றுப்படுகை பகுதியில் நேற்று ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனை மற்றும் ஆய்வுப் பணி மேற்கொள்ள சென்று கொண்டிருந்தனர். அப்போது முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 28) என்பவர் மணல் நிரப்பப்பட்ட 2 கோணிப்பை மூட்டைகளை மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தி வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மணல் மூட்டைகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News