உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை- திருப்பூரில் நாளை மின்தடை

Published On 2021-12-29 08:42 GMT   |   Update On 2021-12-29 08:42 GMT
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 30-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:-

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலான்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, சிக்கனூத்து, அய்யம்பாளையம்புதூர், குமாரபாளையம், சுங்காரமுடக்கு, வரதாஜபுரம், முருங்கப்பட்டி, கோட்டமங்கலம், குடிமங்கலம்.

திருப்பூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 30-ந்தேதி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கம், கல்லூரி சாலை, ஓடக்காடு, பங்களா பேருந்து நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேசன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ.லே. அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருக்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் திரையரங்கம் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி திரையரங்கம் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.திரையரங்கம், ஆஷர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை மற்றும் வேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News