கிறித்தவம்
புனித செபஸ்தியார் ஆலய திருவிழா: சமபந்தி விருந்து
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய 10 நாள் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய 10 நாள் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. 8-ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை சமபந்தி விருந்து, 6.15 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர் பவனி நடந்தது.
விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குதந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை அஜின் ஜோஸ், அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணை தலைவர் சகாய பால் ததேயு, செயலாளர் புஷ்பாஸ், துணை செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குதந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை அஜின் ஜோஸ், அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணை தலைவர் சகாய பால் ததேயு, செயலாளர் புஷ்பாஸ், துணை செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.