செய்திகள்
பேரையூர் அருகே மின்மோட்டார் திருடியவர் கைது
பேரையூர் அருகே மின்மோட்டார் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
பேரையூர் தாலுகா செட்டியபட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் திருடு போனது. இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் மோட்டார் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் மின் மோட்டாரை திருடியதாக காரைக்கேணியை சேர்ந்த கண்ணன் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.