செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2019-10-17 09:53 GMT   |   Update On 2019-10-17 09:53 GMT
ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படுகிறது.

முகாமில் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை கல்வித் தகுதிக்கு ஏற்ப பணிகளுக்கு தேர்வு செய்கின்றனர்.

பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை தேடுபவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்வி சான்றுகள், ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டு மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும்.

இங்கு தனியார் நிறுவனங்களில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. அரசுத் துறையில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News