ஆன்மிகம்
நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசுவதற்காக சந்தன குடம் எடுத்து செல்லப்பட்டதை படத்தில் காணலாம்.

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி

Published On 2021-01-25 02:51 GMT   |   Update On 2021-01-25 02:51 GMT
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம நடைபெற்றது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திடலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது

முக்கிய வழியாக வந்து நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது. பின்னர் பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், 27-ந்தேதி(புதன்கிழமை) கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு பணியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் தலைமையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1,500 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News