இந்தியா
கோப்பு புகைப்படம்

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

Published On 2022-01-11 13:25 GMT   |   Update On 2022-01-11 15:27 GMT
கொரோனா பரவல் மற்றும் இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: 

நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News