உள்ளூர் செய்திகள்
கைது

சென்னையில் ஒரே வாரத்தில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-04-16 08:18 GMT   |   Update On 2022-04-16 08:18 GMT
கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் 14 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

சென்னை பெருநகரில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை சென்னையில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 74 குற்றவாளிகள் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளிகள், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள், பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த 1 குற்றவாளி, தீபாவளி சீட்டு பண்டு மோசடியில் ஈடுபட்ட 1 பெண் குற்றவாளி மற்றும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 1 குற்றவாளி என மொத்தம் 14 குற்றவாளிகள் ஒரு வாரத்தில் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News