ஆன்மிகம்
சரஸ்வதி

மாணவச் செல்வங்களுக்கு மறதி ஏற்படாமலிருக்க பயன் தரும் ஸ்லோகம்...

Published On 2020-09-05 08:35 GMT   |   Update On 2020-09-05 08:35 GMT
மாணவ, மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
கலைவாணி வழிபாடு கல்விச் செல்வம் வழங்கும். பூஜை அறையில் சரஸ்வதி படம் வைத்து பாடல் படித்து வழிபடலாம். வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள் சிலர், வினாத்தாளை வாங்கியவுடன் மறந்து விடுவதுண்டு. இதனால் அவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ, மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

சரஸ்வதி நமோஸ்துப்யம்,

வரதே காம ரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி,

ஸித்தர் பவது மே ஸதா!

இந்த சுலோகம் அல்லது கலை வாணி துதிப்பாடல், சகலகலாவல்லிமாலை போன்றவற்றை படிக்கலாம்.
Tags:    

Similar News