செய்திகள்
துணியை பிடிக்க முயன்றபோது 12-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி
போரூர் அருகே காய வைத்த துணியை பிடிக்க முயன்றபோது 12-மாடியில் இருந்து விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
போரூர், கிண்டி டிரங்க் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12-வது தளத்தில் வசித்து வருபவர் ராஜூ. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி அல்கா (வயது 62). அல்கா நேற்று மதியம் வீட்டில் உள்ள பால்கனியில் துவைத்து காய வைத்த துணிகளை எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது கொடியில் இருந்த ஒரு துணி நழுவி கீழே விழுந்தது. அதனை அல்கா பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி 12-வதுமாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம்அடைந்த அல்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அல்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர், கிண்டி டிரங்க் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12-வது தளத்தில் வசித்து வருபவர் ராஜூ. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி அல்கா (வயது 62). அல்கா நேற்று மதியம் வீட்டில் உள்ள பால்கனியில் துவைத்து காய வைத்த துணிகளை எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது கொடியில் இருந்த ஒரு துணி நழுவி கீழே விழுந்தது. அதனை அல்கா பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி 12-வதுமாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம்அடைந்த அல்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அல்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.