செய்திகள்
டிடிவி தினகரன்

மீனவர்கள் பிரச்சனைக்கு அரசு உடனே தீர்வு காண வேண்டும்- டி.டி.வி.தினகரன் கோரிக்கை

Published On 2021-07-20 08:58 GMT   |   Update On 2021-07-20 08:58 GMT
சுருக்குமடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சுருக்குமடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்காக மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியதானது அல்ல.

மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நம்முடைய மீனவர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சுருக்குமடி வலை பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News