செய்திகள்
கொலை

பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் எரித்துக்கொலை

Published On 2021-01-22 06:57 GMT   |   Update On 2021-01-22 06:57 GMT
பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஒத்தவீடு கரட்டு பகுதியில் ஆண் சடலம் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியகுளம் டி.எஸ்.பி. முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் இருந்த வாலிபர் உடலை பார்வையிட்டு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டார்.

முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் 25 முதல் 30 வயது உடைய வாலிபர் என்றும், அவரது உடல் முற்றிலுமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்தது. மேலும் வாலிபரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி எரிந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற விபரமும் தெரியவில்லை. இது குறித்து மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து யாரேனும் புகார் கொடுத்துள்ளார்களா? எனவும், எரிந்த நிலையில் உள்ள ஆண் யாரென்று கண்டுபிடிப்பதற்கான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் கள்ளக்காதல் பிரச்சனையால் கொலை நடந்துள்ளதா? சொத்து தகராறு காரணமாக கொலை நடந்ததா? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வைகை அணை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள், மேல்மங்கலம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் வந்தும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News