செய்திகள்
கைது

தொப்பூர் அருகே ஆடு திருடியவர் கைது

Published On 2021-10-08 13:19 GMT   |   Update On 2021-10-08 13:19 GMT
தொப்பூர் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள கமலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது45). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனியின் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஒரு ஆட்டை அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து பழனி தொப்பூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் பொம்மிடி சந்தையில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஆட்டை மீட்டு பழனியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News