செய்திகள்
தற்கொலை

நன்னிலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-22 10:02 GMT   |   Update On 2021-11-22 10:02 GMT
நன்னிலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள அதம்பாவூர் மேல தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். சமீபகாலமாக மனநிலை சரி இல்லாமல் இருந்து வந்தாநிலையில் 20ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லும் வழியிலேயே அன்பழகன் இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News