செய்திகள்
மின்சார நிறுத்தம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலைய பகுதிகளில் 23-ந் தேதி மின்வினியோகம் நிறுத்தம்

Published On 2021-11-21 13:48 GMT   |   Update On 2021-11-21 13:48 GMT
தஞ்சை மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலைய பகுதிகளில் 23-ந் தேதி மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பிள்ளையார்பட்டி:

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணைமின் நிலையத்தில் 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பஸ்நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர்.நகர், காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை, மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மனோஜிப்பட்டி ரெட்டிப்பாளையம் ரோடு, சிங்கப்பெருமாள்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News