ஆன்மிகம்
வேதாரண்யேஸ்வரர் கோவில்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அபிஷேகத்தை பார்க்க பக்தர்களுக்கு தடை

Published On 2021-04-19 07:43 GMT   |   Update On 2021-04-19 07:43 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அபிஷேக ஆராதனையை பக்தர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய 3-லும் சிறப்புடைய இந்த ேகாவிலில் திருமண கோலத்தில் சிவபெருமான் அகஸ்திய முனிவருக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் சிவலிங்கத்துக்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்து காட்சியளிக்கிறார்கள்.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதம் ் நடைபெறும் சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை சாத்தப்பட்ட சந்தனம் களையப்பட்டு பல்வேறு திரவியங்களாலும், பால், இளநீர் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் தைலத்தால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக இந்த அபிஷேகத்தையும் சிறப்பு தீபாராதனையும் பக்தர்கள் காண அனுமதி வழங்கப்படவில்லை. சிறப்பு தீபாராதனை முடிந்த பிறகு பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்று(திங்கட்கிழமை) அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் திருமணக்காட்சி முடிந்த பிறகு தான் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News